கல்லூரி மாணவி மாயம்

ஆறுமுகநேரி, மார்ச் 23: ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் உப்பள  தொழிலாளி. இவரது மகள் பவிதா, காயல்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் விசாரித்த போது அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை ஆனந்தராஜ், ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ செல்வக்குமார் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

Related Stories: