காரைக்குடி: காரைக்குடியில் நேஷனல் கேட்டரிங் மற்றும் பயர் அண்டு சேப்டி கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரிகளின் தாளாளர் சையது வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘கல்விதான் நமக்கு மிகப்பெரிய சொத்து. நாம் நினைக்கும் அனைத்து உயர்நிலைகளுக்கும் கல்வியால் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இந்தியாவில் சுற்றுலாத் துறை வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 8 மில்லியன் மக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வருகை புரிவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு என பல்வேறு நட்சத்திர தங்கும் விடுதிகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சியின் மூலம் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதால், கேட்டரிங் துறைக்கு சார்ந்த படித்த மாணவர்களுக்கு இன்று வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.