மதுரை: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களான நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவை தொகை உள்ளன. இந்த தொகையினை பெற வரும் 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்களான சங்க நெசவாளர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஒளிநகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை மதுரை செனாய் நகரில் 29, கக்கன் தெருவில் உள்ள கைத்தறிதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கைத்தறி அலுவலர், கலைத்தல் அலுவலரிடம் நேரில் வந்து வழங்க வேண்டும். இதை தொடர்ந்து, அரசிடமிருந்து நிலுவை தொகையினை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.