தஞ்சை, மார்ச் 21: தமிழ்ப் பல்கலைக்கழகம், சிற்பத்துறையில் முதுநுண்கலை சிற்பம் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர்கள் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக பஞ்சலோகச் சிற்பம் பயிலும் இளங்கோவன், இளவரசன், கற்சிற்பம் பயிலும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது” சான்றிதழ், ரூ.10,000க்கான காசோலை மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.