திருவையாறு அருகே பெண் மானபங்கம்: வாலிபர் கைது

திருவையாறு: திருவையாறு அடுத்த கீழத்திருப்பூந்துருத்தி பில்லுக்காரத் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி ராசாத்தி(46) இவரது கணவர் கனகராஜ் இறந்து 10 வருடமாகிறது. ராசாத்தி தனியாக வசித்து வருகிறார். கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வாழை கொல்லையில் பூ நார் உரிக்கும் வேலைக்கு ராசாத்தி சென்று வருவது வழக்கம், அதே கொல்லையில் கீழத்திருப்பூந்துருத்தி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மகன் பிரதாப்(25) மற்றும் பலர் நார் உரிக்கும் வேலை செய்துவந்தனர்.

நேற்று முன்தினம் குடிபோதையில் பிரதாப் ராசாத்தியிடம் தவறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு ராசாத்தி வீட்டின் கதவை தட்டியுள்ளார். ராசாத்தி எழுந்து வந்து பார்த்தபோது பிரதாப் ஓடிவிட்டாராம். நேற்று காலை பிரதாப்பை பார்த்து ஏன் என் வீட்டு கதவை தட்டினாய் என்று ராசாத்தி கேட்டபோது, தகாத வார்த்தையால் திட்டி அடித்து மானபங்க படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ராசாத்தி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: