மதுரை, மார்ச் 21: மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக நேற்று இரவு சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பழங்காநத்தம் அருகே ரோட்டில் சென்ற டூவீலர்கள் மீது திடீரென அந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதேபோல் பைபாஸ் ரோட்டில் தொடர்ந்து சென்ற அந்த கார், மேலும் ஒரு கார் மற்றும் சில டூவீலர்களில் மீது மோதியது. இதில் அவற்றில் சென்ற 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த காரை பொதுமக்கள் வாகனங்களில் விரட்டிச்சென்று பெத்தானியபுரம் குரு தியேட்டர் அருகே மடக்கிப்பிடித்தனர்.