சென்ட்ரிங் பொருட்கள் திருடிய 4 பேர் கைது

குளத்தூர், மார்ச் 21: விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, சென்ட்ரிங் கான்ட்ராக்டர். இவர், கடந்த 14ம் தேதி குளத்தூர் முள்ளூர் வழிச்சாலையில் ஓடை பாலப் பணிகளுக்காக சென்ட்ரிங் பொருட்களை இறக்கி வைத்திருந்தார். மறுநாள் சென்ட்ரிங் பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் குளத்தூரை சேர்ந்த கணேசன் மகன் செல்வமதன், முருகன் மகன் மாரியப்பன் மற்றும் காளிவேல்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் சென்ட்ரிங் பொருட்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், 4பேரையும் கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: