சுட்டெரிக்கும் வெயில் கோவில்பட்டியில் தர்ப்பூசணி விற்பனை அமோகம்

கோவில்பட்டி, மார்ச் 20: சுட்டெரிக்கும் வெயிலால் கோவில்பட்டியில் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் கொடுமை தாங்காமல் மக்கள் தர்ப்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். திண்டிவனத்தில் இருந்து லாரிகள் மூலம் கோவில்பட்டி கொண்டு வரப்படும் தர்ப்பூசணி பழங்கள் கிலோ ரூ.20க்கும், ஒரு துண்டு ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு, மெயின் பஜார், பஸ்நிலையம் உள்ளிட்ட சாலையோர கடைகளில் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும் தர்ப்பூசணி விளைச்சல் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: