குழந்தை இல்லாத வேதனை விஷம் குடித்து வாலிபர் சாவு

விருத்தாசலம், மார்ச் 20: விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவரது மனைவி சுமதி(30). இவர்களுக்கு கடந்த ஏழு வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதுவரை குழந்தை இல்லை. இதனால் பல மருத்துவமனைகளில் காண்பித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சதீஷ்குமார் மன விரக்தியில் இருந்து வந்தார்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்று வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: