வத்திராயிருப்பு, மார்ச் 18: வத்திராயிருப்பு தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலகங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வீட்டுமனைப்பட்டா, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவை ஓஏபி தாசில்தார் செந்தில் குமாரிடம் மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். வருவாய் ஆய்வாளர் குமரேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆறுமுகம், வேலம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.