விழாவின் 4ம் நாளான நேற்று முன்தினம் மாலை திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதற்காக கிராம பெண்கள், மேள தாளங்களுடன் பட்டு வஸ்திரங்கள், மலர்கள், பழங்கள், பூஜை பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டதையடுத்து, திருக்கல்யாணம் புஜைகள் நடத்தி, திரவுபதி அம்மனின் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர், அப்போது, பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக குழுத்தலைவர் ரமணராஜூ தலைமையில் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post பள்ளிப்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.