செங்கல்பட்டு, மார்ச் 18: செங்கல்பட்டில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்க உள்ளது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், 2023ம் ஆண்டிற்கான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை (18.3.2023) நடக்க உள்ளது. செங்கல்பட்டில் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.