திருச்செந்தூர், மார்ச் 18: திருச்செந்தூரில் ஒர்க்ஷாப்பில் வாகன உதிரிபாகம் திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் காளிராஜன்(47). இவர், திருச்செந்தூர் ராஜ் கண்ணாநகர் தெற்கு தெருவில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு, வேலை முடிந்ததும் வழக்கம்போல் ஒர்க்ஷாப்பை பூட்டி விட்டு காளிராஜன் வீடு திரும்பினார். மறுநாள் காலையில் சென்ற போது ஒர்க்ஷாப்பில் இருந்த வாகன உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹85 ஆயிரம் ஆகும்.