கத்தியுடன் மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி, மார்ச் 17: தூத்துக்குடி  வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்  மாணிக்கராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சென்ற ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி  பணம் கேட்டு தகராறு செய்ததாக, தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த  லூர்துசாமி மகன் ஜெர்விந்த் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஜெர்விந்த் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: