காஞ்சிபுரம், மார்ச் 16: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி தோராட்டம் நடக்க இருக்கிறது.
காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யதோக்தகாரி பெருமாள் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கடந்த 13ம் தேதி தொடங்கி செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து, பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நிலையில், யதோக்தகாரி பெருமாள் நேற்று காலை 5 மணிக்கு சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.