மேலூர், அக். 1: மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் பாண்டி மகன் பொன்னையன்(47). இவருக்கு 2010ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் மனைவியுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டனர். இவர் தனியாக வீட்டின் முன்பு இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பொன்னையனின் மனைவியின் சகோதரி தனத்தின் மகன் நவீன், மற்றும் 2 பேர் இவரது கடைக்கு ஒரு காரில் வந்துள்ளனர்.