சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள எல்.கொட்டாணிபட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் பால்பாண்டி(23), இவர் காரைக்கேணியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அச்சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, டி.கல்லுப்பட்டி ஊர்நல மகளிர் நல அலுவலர் புகாரின் பேரில், டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

Related Stories: