அக்.2ல் இறைச்சி விற்க மாநகராட்சி தடை

மதுரை, செப். 30: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தில் அக்.2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Related Stories: