பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் ‘அபேஸ்’

மதுரை, செப். 30: திருச்சி மாவட்டம், உறையூர் கீழமூல வீதியைச் சேர்ந்தவர் மோதிலால். இவரது மனைவி லட்சுமி (59). மதுரை வந்த இவர் நேற்று முன்தினம் மாலை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் கைத்தறி நகருக்கு சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் லட்சுமி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றார். அதில் 21 பவுன் நகை இருந்தது. இதுகுறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: