போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை, செப்.22: நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் செப்.20ம் தேதி போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் வரவேற்று தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இன்ஸ்பெக்டர் வனசுந்தர், எஸ்ஐக்கள் தில்லைநாயகம், காசிபாண்டி ஆகியோர் மாணவர்களிடம் போதைப் பழக்கத்திற்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும். போதைப் பழக்கம் இல்லா உலகத்தில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக காவல்துறையும் மற்றும் தாமிரபரணி பொறியியல் கல்லூரியும் இணைந்து செய்திருந்தது.