நெல்லை, ஜூன் 14: நெல்லை டவுன் திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவினர் வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இருநாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். வல்லநாடு அருகே நாணல்காடு சிவகாமி உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோயில், மானாமதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபட்டனர்.