பண்ருட்டி, மே 24: பண்ருட்டி அருகே சேமகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சீத்தா(27). இருவருக்கும் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக சீத்தா உடல்நலமின்றி இருந்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனேதும் ஏற்படவில்லை. அவரது உறவினர்கள் அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி அங்குள்ள அய்யனார் கோயிலில் தங்க வைத்தால் சரியாகும் என கூறியுள்ளதை நம்பி அய்யனார் கோயிலில் தங்க வைக்கப்பட்டார். அங்கு திடீரென சீத்தா மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருதுவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சீத்தாவின் தாய் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவருக்கு திருமணமாகி 5 வருடம் மட்டுமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்காக அறிக்கை அனுப்பி உள்ளனர்.