சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி செல்வதை தவிர்க்க மண்ணிவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வலியுறுத்தி பேசினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது. செங்கல்பட்டு தொகுதியில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 20,000 மக்கள் வசிக்கின்றனர். அந்த இடத்தில் இருந்து மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தால், தாம்பரம் அல்லது கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய நிலையாக இருக்கிறது. எனவே, அந்த மண்ணிவாக்கத்திலேயே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்என்றார்.
மருத்துவ சிகிச்சைக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி செல்வதை தவிர்க்க மண்ணிவாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்
- அரசு ஆரம்ப சுகாதார மையம்
- மண்ணிவாக்கம்
- தாம்பரம்
- கூடுவாஞ்சேரி
- திமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- வரலக்ஷ்மி
- சட்டசபை