ஆரணி, மார்ச் 26: ஆரணி அருகே மினி வேனில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(50), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மகாராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும், இவர் ஆரணி டவுன் மில்லர் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் சங்கர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மினி வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, மினி வேனை டிரைவர் இயக்கியுள்ளார்.