பெரம்பலூர், பிப்.3: பெரம்பலூர் ரோவர் பிசியோதெரபி கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. கடந்த 31.01.2022 அன்று ரோவர் பிசியோதெரபி கல்லூரியின் 25ம் ஆண்டின் மாணவர் சேர்க்கை ரோவர் பிசியோதெரபி கல்லூரியில் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் ரோவர் கல்வி குழுமத்தின் தாளாளர் கே.வரதராஜன், சிறப்பு விருந்தினராக ரோவர் பிசியோதெரபி கல்லூரியின் முன்னாள் மாணவர் டாக்டர் பழனிவேல் மாயவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் ரோவர் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.வி.ஜான் பிராங்கிளின் மற்றும் துணைமுதல்வர் டாக்டர் கே.கிருஷ்ணராஜா மற்றும் அலுவலக மேலாளர், இருபால் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.