பல்வேறு வழக்குகளில் தொடர்பு குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

தஞ்சை, ஜன.29: கும்பகோணம் நால்ரோடு சிவகுருநாதன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் ஆடலரசன்(21). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தஞ்சை எஸ்பி. ரவளிப்ரியா காந்தபுனேனி பரிந்துரையின்பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் ஆடலரசனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆடலரசன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: