ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூரில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீவைகுண்டம், ஜன. 29: ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும்  பட்டதாரிகளுக்கு ரூ.50ஆயிரம், 10ம் வகுப்பு, பிளஸ்2  படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகையை வழங்கினார். வட்டார சமுக நலத்துறை அலுவலர் எடின்டாமேரி, பிடிஓக்கள் சுரேஷ், அன்டோ முன்னிலை வகித்தார். விழாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

இதேபோல் கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார். யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார சமூகநலத்துறை அலுவலர் பாக்கியலட்சுமி, பிடிஓக்கள் செல்வி, பாக்கியலீலா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளில் ஏபிடிஓக்கள் மகேந்திரபிரபு, கண்ணன், லட்சுமணன், யூனியன் கவுன்சிலர்கள் பாரத், சுந்தரிகுமார், பழையகாயல் பஞ். தலைவர் செல்வகுமார், காங். நிர்வாகிகள் சங்கர், எடிசன், சீனிராஜேந்திரன், ஜெயசீலன், கருப்பசாமி, சித்திரை, சந்திரன், நல்லகண்ணு, புங்கன்சித்தார்த்தன், நயினார் ஐயப்பன், மாரிச்செல்வம், முத்துகிருஷ்ணன்,  

பழனி, அப்துல் ரவூப், ரமேஷ், பழனி மாரியப்பன், வனிதா ஸ்டாலின், அப்சர்,  ஹரிதாஸ், இசக்கி, பாலசுப்பிரமணியன், சிவகளை பிச்சையா, சிங்கப்பன், நிலமுடையான், மகாராஜன்,  சிந்தியா, பிச்சைகண்ணன், கோதண்டராமன், தாசன், சற்குரு, சொரிமுத்து பிரதாபன், மாசானமுத்து, எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், திமுக விவசாய அணி ராயப்பன், மாவட்ட துணை தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: