கந்தர்வகோட்டை அருகே குடும்ப பிரச்னையில் ஒருவருக்கு வெட்டு

கந்தர்வகோட்டை, ஜன.28: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பெரியமனைகொல்லை கிராமத்தில் ஒரே தெருவில் வசித்துவரும் முத்துச்சாமி மகன் அஞ்சப்பன்(46), ராமையன் மகன் பாண்டியன் ஆகிய இருவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறின்போது, பாண்டியன் அஞ்சப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அஞ்சப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை கந்தர்வகோட்டை மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அஞ்சப்பனை வெட்டிய பாண்டியனை வலைவீசி தேடி வருகிறனர்.

Related Stories: