தஞ்சை, ஜன.19: தஞ்சை மாவட்டம் மாத்தூர் மேற்கு மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (40). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அந்த பகுதி வார்டு உறுப்பினர். இவர் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மது அருந்தி வந்துள்ளார். இதனை கடந்த 16ம் தேதி பார்த்த ஆனந்தன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜேந்திரன் மற்றும் தொட்டி மாத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவீந்தர் (45) இருவரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஆனந்தன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் ரவீந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.