கடையநல்லூர், டிச. 11: கடையநல்லூர் ஒன்றியம் போகநல்லூர் ஊராட்சியில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்டுமான பணியை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் யூனியன் சேர்மன் சுப்பம்மாள், போகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குருசண்முகப்பிரியா ராஜேந்திரன் தலைமை வகித்தனர். யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஊராட்சி துணை தலைவர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர்.