வேட்டவலம், டிச.5: வேட்டவலம் அருகே 2ஆயிரம் லிட்டர் சாராய ஊறைலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். வேட்டவலம் எஸ்.ஐ சுப்பிரமணியன் தலைமையில் தலைமை காவலர்கள் சங்கர், சாதிக், தனிப்பிரிவு காவலர் சசிகுமார், மற்றும் போலீசார் நேற்று வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஓலைப்பாடி கிராமத்தில் தீவிர சாராய ஒழிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.