நாகை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

நாகை, டிச.4: நாகை மாவட்டத்தில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் முழுவதும் இன்று (4ம் தேதி) மெகா தடுப்பூசி முகாமில் 25 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பேராயுதம். எனவே இன்று (4ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் 400 சிறப்பு முகாம்களிலும் மற்றும் வீடு, வீடாக சென்று 25 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: