1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வேட்டவலம், டிச.3: வேட்டவலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுயம்பு மூலவர் அகத்தீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் நந்திக்கு பால், பன்னீர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நந்தி பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories: