தண்டராம்பட்டு, ஏப்.18: தண்டராம்பட்டு அருகே சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், கீக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்(32). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. சாத்தனூர் கிராமத்தில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு தங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோஜ் குமார், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி குளித்து கொண்டிருந்தபோது மாடியில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர், மாடியில் மனோஜ்குமார் நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.