கலசபாக்கம், ஏப்.16: கலசபாக்கம் அடுத்த பர்வதமலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை அமைந்துள்ளது. பவுர்ணமி நாட்களில், தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பர்வதமலை மீது ஏறிச்சென்று, அங்குள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை பர்வதமலையில் இருந்து கடலாடி செல்லும் மலை பாதையில், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வழியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள், அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.