காஞ்சிபுரம், ஏப்.2: உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியத்தின் பட்டா, நெற்குன்றம், ஆனம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, ஆனம்பாக்கத்தில்தெருக்கூத்து கலைஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவர்களிடம் தெருக்கூத்துக் கலை மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் மேம்பாட்டுக்கும் அதிமுக என்றென்றும் துணை நிற்கும். மாணவர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் மேம்பாட்டுக்கு அதிமுக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர், உத்திரமேரூர் தொகுதி இளைஞர்களின் மேம்பாட்டுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். குளம், குட்டை, ஏரிகள் தூர்வாரப்பட்டு நீராதாரங்கள் மேம்படுத்தப்படும். குடவோலை முறையால் தேர்தல் குறித்து பண்டைய காலத்திலேயே விழிப்புணர்வு பெற்றிருந்த உத்திரமேரூர் முதன்மை தொகுதியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார்.