திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஈச்சனாரி, மதுக்கரையில் பிரசாரம்

கோவை, ஏப். 1:  கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று ஈச்சனாரி மற்றும் மதுக்கரை பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் வெள்ளலூர் வார சந்தை மற்றும் சொரூபராணி மைதானம் பகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில், முருகேசன், ராஜேந்திரன் மற்றும் செட்டிபாளையம் கார்த்தி, ராஜ்குமார், ஆனந்த்குமார், இளங்கோ, சிவா, செந்தில் உள்பட 50 மேற்பட்டஇளைஞர்கள் பங்கேற்று அந்தப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ஈ.பி.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.