அறந்தாங்கி, மார்ச்.30: ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் எம்எல்ஏ மெய்யநாதன் திருவரங்குளம் ஒன்றியம் சேந்தன்குடி, நகரம், ஆலங்காடு, கீழாத்தூர், வெள்ளாகுளம், செரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் மெய்யநாதன் பேசுகையில், எதிர்க்கட்சியாக இருந்த போதும் இப்பகுதி முழுவதும் நேரடியாக பார்வையிட்டு பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த மு.க ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் . எனவே ஏழை குடும்பங்களில் வாழ்க்கை தரம் முன்னேற உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.