திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம்

 

திருச்சி, ஏப். 29: திருச்சி பாலக்கரையை சேர்ந்த வாலிபர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி பாலக்கரை பீமநகர் கீழ கொசத்தெருவை சேர்ந்தவர் ஆவுளி. இவர் மனைவி ஹரினி. இந்த தம்பதியரின் மகன் மனோஜ் குமார் (28). இவர் கடந்த 11.3.24ம் தேதி மாலை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உடன் அவரது பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர், நண்பர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் மனோஜ் குமார் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான தன் மகனை கண்டுபிடித்து தரும்படி ஹரினி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த உறையூர் போலீசார் மாயமான மனோஜ் குமாரை தேடி வருகின்றனர்

 

The post திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: