சென்னை, மார்ச் 24: சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத முதல்வர், தன்னை விவசாயி என்று ஏமாற்றி வருகிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியுள்ளார்.
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தின் காபந்து முதல்வராக இருக்கக்கூடிய பழனிசாமியை போலி விவசாயி என பலமுறை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னார். போலி விவசாயி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நான் விவசாயி தான், விவசாயி தான் எடப்பாடி என்று ெசால்லிக்கொண்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனு தாக்கலின் போது, வேளாண்மை இடம், அமைவிடங்கள், நில அளவை எண்கள் என்று கேட்கப்பட்ட கேள்வியில் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தான் விவசாயியா?. விவசாய நிலம் இல்லாத சிறந்த விவசாயி யார் என்றால் அவர் எடப்பாடி பழனிசாமிதான். இந்த அரசை காப்பாற்றியது பாஜ. அப்படியானால் இந்த அரசு நின்றதோ? நடத்தியதோ எடப்பாடி பழனிசாமி இல்லை.