திருப்போரூர்: திருப்போரூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திருப்போரூர் அருகே காயார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். (70). கடந்த 2006ம் ஆண்டு காயார் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மனைவி நவநீதம். இவர்களது, மூத்த மகன் தசரதனுடன் சந்திபாட்டை தெருவில் வசிக்கிறார். பக்கத்து வீட்டில் 2வது மகன் சம்பத், 3வது மகன் சுரேஷ் ஆகியோர் வசிக்கின்றனர். இதில் சுரேஷ், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். சுரேஷ் தனது மகள் லித்திகாவின் மஞ்சள் நீராட்டு விழாவை கடந்த 10ம் தேதி இரவு நடத்தினார். இதற்காக வந்த உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம், சொந்த ஊர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு சுரேஷ், அவரது மனைவி காமாட்சி, மகள் லித்திகா, மகன் தர்ஷன் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.