32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை தொடக்கம்

 

கிருஷ்ணகிரி, ஜூலை 9: கிருஷ்ணகிரியில் நாளை (10ம் தேதி) 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில், நாளை (10ம் தேதி) மாலை 5 மணிக்கு 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது. விழா முன்னேற்பாடு மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் நடப்பாண்டு 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் தொடக்க விழா நாளை (10ம் தேதி) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் மா அரங்கம், மலர் கண்காட்சி அரங்கம், 50 அரசுத்துறை அரங்குகள், 80 தனியார் துறை அரங்குகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம், சாகச விளையாட்டு, மேஜிக் ஷோ, பட்டிமன்றம், நாடகங்கள், கிராமிய பாடல்கள், இன்னிசைக் கச்சேரிகள், நடன, நாடக நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளது.

Related Stories: