சின்னசேலம் பஸ்நிலையத்தில் போதை பாக்கு பறிமுதல்

 

சின்னசேலம், ஜூன் 29: சின்னசேலம் பஸ்நிலையத்தில் நின்ற வாலிபரிடம் 14.6 கிலோ கிராம் போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சின்னசேலம் பழைய பஸ்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் சுமார் 14.6கிலோ கிராம் போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரைப்பற்றி விசாரித்தபோது தண்டலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்(37) என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவரது பைக், புகையிலைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வெங்கட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: