உத்திரமேரூர், ஜூன் 22: உத்திரமேரூரை சேர்ந்தவர் உதயகுமார் (26), கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் உத்திரமேரூர் போலீசார் கட்டிட தொழிலாளி உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உதயகுமார் கல்லூரி மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்தது உறுதியானது. இதையடுத்து உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
