திருப்போரூர், ஜூன் 22: முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் 12வது சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாதிரிப்பள்ளி முதல்வர் லீலாவதி வரவேற்றார். முன்னாள் இயக்குநர் நச்சிகேதா ரவுத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர், மனிதவள மேம்பாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
