துறைமங்கலம் அருகே ஆலந்துறை அம்மன் கோயில் இடம் ஆக்கிரமிப்பு

 

பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூர் துறைமங்கலம் அருகே கோவில் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், வாசுகி தெருவைச்சேர்ந்த பொதுமக்கள் ரெங்கநாதன் தலைமையில் ராஜேந்திரன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டடோர் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியிலிருந்து அருகே கவுல்பாளையம் ரோடு, ஆலந்துறை அம்மன் கோவிலுக்கும் கிழக்கே அமைந்துள்ள, வீர ரெட்டியார் அம்பலக்காரன் கோவில் சுமார் 75 ஆண்டுகளாக முப்பாட்டார்கள் தலை முறையாக துறைமங்கலம், அரணாரை,

எசனை, அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பாடாலூர் ஆகிய 7 கிராம மக்களுக்கும் குல தெய்வமாக நாங்கள் வழிபட்டு வருகிறோம். தற்போது எங்கள் கோவிலுக்கும் கிழக்கே தனியார் சார்பாக மதில் சுவர் எழுப்பி உள்ளனர். மேலும் லோடு கணக்கில் மண்ணை கொட்டி சாமியை வழிபட செல்ல முடியாமல் இடையூறு செய்கின்றனர். எனவே நாங்கள் பொங்கல் மாவிளக்கு, கிடாய் வெட்டு பூஜை செய்யவும், வெயிலுக்கு சாமியான பந்தல் அமைக்கும் இடத்தில் மண்ணை அப்புறப்படுத்தி தருமாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: