நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் -ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம்- ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் என்று உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் -ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.

இந்த சோபா மாடல் அரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல. தேர்தல் பிரசாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் -ஒழுங்கு பத்தி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசினவர், முதல்வர் ஆனதும் டிப் ஸ்லிப் மோடுக்கு போய்ட்டாரு. பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.

நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க. சிங்கப்பெண் படைனு பேரையும், யூனிபார்மையும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?. நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம்- ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: