சாத்தூர், மார்ச் 4: சிவகங்கை மாவட்டம் பாலாவயல் பகுதியை சேர்ந்தவர் ஆலப்பன்(53). இவர் சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா போர்ட்ஸ் கம்பெனியில் தங்கி பிட்டராக வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தங்கு அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்லாததால் அவருடன் வேலை செய்து வரும் வடிவேலு ஆலப்பனை எழுப்பியுள்ளார். ஆனால், ஆலப்பன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.