கீழக்கரை, மார்ச் 4: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலையில் நடந்தது. கோயிலில் உள்ள வலம்புரி விநாயகர் முத்துமாரியம்மன் நாராயணசுவாமி, தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட மூலஸ்தான பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1ம் தேதி நடந்தது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. ஐந்தாம் கால யாகசாலை முன்னிட்டு நேற்று காலை 6 மணி அளவில் மங்கல இசை விக்னேஸ்வர பூஜை கோ பூஜை உள்ளிட்டவை நடந்தது.