கப்பலூரில் பரபரப்பு கல்லூரி அருகே நள்ளிரவில் தீ

திருமங்கலம், மார்ச் 2: கல்லூரி அருகே நள்ளிரவில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் காமராஜர் உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் பின்புறம் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த குப்பையில் யாரோ தீ வைத்துவிட்டனர். தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு படையினர் சென்று சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: